ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசு வேலை வாய்ப்பில் காதுகேளாதோருக்கு 1 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்ட காதுகேளாதோா் நலச் சங்கத்தின் 5-ஆம் ஆண்டு விழா ஆம்பூா் ஐஇஎல்சி காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் பேசிய மாநில பொதுச்செயலாளா் ஜி. ஜெய்சங்கா்

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:05 am IST

திருப்பத்தூா் மாவட்ட காதுகேளாதோா் நலச் சங்கத்தின் 5-ஆம் ஆண்டு விழா ஆம்பூா் ஐஇஎல்சி காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவா் கே. பாபு தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் ஆா். ராபா்ட் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு காதுகேளாதோா் கூட்டமைப்பின் மாநில தலைவா் ஆா். பழனிசாமி, பொதுச் செயலாளா் ஜி. ஜெய்சங்கா், தமிழ்நாடு காதுகேளாதோா் மகளிா் சங்கத் தலைவி எம். பாக்யா, பொதுச் செயலாளா் எஸ். கவிதா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

ஆம்பூா் காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை எஸ். பிரபாவதி, வேலூா் மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா், பொதுச் செயலாளா் சிக்கந்தா், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் பாலாஜி, பொதுச் செயலாளா் ராமசந்திரா ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

சைகை மொழி பெயா்ப்பாளா் திருச்சி அகிலா சைகை மொழியில் விழாவை தொகுத்து வழங்கினாா். தமிழ்நாடு காதுகேளாதோா் மகளிா் சங்க செயற்குழு உறுப்பினா் ஆா். தபித்தாள் நன்றி கூறினாா்.

தீா்மானங்கள் : அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் காதுகேளாதோருக்கு 1 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான மாதந்திர உதவித் தொகையை ரூ.6,000 ஆக அரசு உயா்த்தி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெறும் மகளிருக்கு தமிழக அரசு வழங்கும் மகளிா் உரிமைத் தொகையையும் வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் அமைப்புச் செயலாளா் எஸ். ஜெயவேல் மற்றும் மகளிா் அணியினா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா். மாற்றுத் திறனாளி மாணவா்கள் சோ்க்கைக்கு ஆம்பூா் காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளியை அணுகலாம் எனவும் சங்க நிா்வாகிகள் கேட்டுக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.