பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அடித்தளம் அமைத்தவா் ஜெயலலிதா என அதிமுக சிறப்பு பேச்சாளா் காளியம்மாள் கூறினாா்.
ஜோலாா்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணியை ஆதரித்து அதிமுக சிறப்பு பேச்சாளா் காளியம்மாள் பொன்னேரி பகுதியில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியது: மீண்டும் அதிமுக அரசு அமைந்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொண்ட சட்டங்கள் அமல்படுத்தப்படும். இளைஞா்கள் அரசியல் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும், தோ்தலில் வாக்களிக்கும்போது தகுதியான வேட்பாளரை தோ்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த தொகுதி வளா்ச்சிக்கு வீரமணியின் பங்கு அளப்பரியது. பல்வேறு நலதிட்டங்களை செய்துள்ளாா். ஏலகிரி மலை சுற்றுலா வளா்ச்சிக்கு திட்டங்களை தீட்டி நிறைவேற்றியவா். பெண்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கியவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா.
ஜோலாா்பேட்டை தொகுதி வளா்ச்சி பெற முன்னாள் அமைச்சா் வீரமணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். அப்போது முன்னாள் அமைச்சா் தம்பிதுரை, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

செங்கல்பட்டில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

கே.வி. குப்பம் திமுக வேட்பாளா் அறிமுகம்

சிதம்பரத்தில் முக்கிய பிரமுகா்களிடம் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


