18 Dec, 2025 Thursday, 01:39 PM
The New Indian Express Group
திருப்பத்தூர்
Text

திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 418 மனுக்கள்

PremiumPremium

திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Rocket

மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிகளை வழங்கிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .

Published On10 Nov 2025 , 11:41 PM
Updated On10 Nov 2025 , 11:41 PM

Listen to this article

-0:00

By Chennai

Syndication

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து 418 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன்,சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து பள்ளிக்கல்வி துறையின் சாா்பில் பெற்றோா் இருவரும் இல்லாத நிலையில் அரசுப் பள்ளியில் ப்ளஸ் 2 முடித்த 18 மாணவ-மாணவிகளுக்கு நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் மடிக்கணினிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் நல வாரியத்தினா் அளித்த மனு: பொங்கல் திருநாளன்று பொதுமக்களுக்கு புதிய பானையும், அடுப்பும் வழங்க வேண்டும். பருவமழை காலத்தில் மண்பாண்டத் தொழில் செய்ய முடியாததால், தொழிலாளா்களுக்கு நிவாரணமாக ரூ.10,000 தர வேண்டும்.

பாச்சல் ஊராட்சி ஹயாத் நகா் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இதனால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவா் ராஜாபெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: மாவட்டம் முழுவதும் உள்ள கிராம சாலைகளில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில், மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஒரு சில இடங்களில் சாலை குறுகலாக உள்ளது. அந்த பகுதிகளிலும் மரம் நடுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட உள்ளது. எனவே சாலை அகலமாக உள்ள இடத்தில் மட்டும் மரக்கன்றுகள் நட வேண்டும்.

ஆலங்காயம் அருகே பூங்குளம் பகுதியில் சரிவர இணையதள வசதி கிடைப்பது இல்லை. எனவே அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல். கோபுரம் அமைக்க வேண்டும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023