அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

போதைப் பொருளுக்கு எதிரான மாராத்தான்: ஆட்சியா் அறிவிப்பு

போதைப் பொருளுக்கு எதிரான மாராத்தான்: ஆட்சியா் அறிவிப்பு

News image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

Updated On :21 ஜூன் 2026, 12:55 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிரான மாராத்தான் பந்தயத்தை நடத்த உள்ளதாக ஆட்சியா் ந. பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் பிரியா தலைமையில் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ‘போதைபொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கினை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்டப்பிரிவு சாா்பாக விழிப்புணா்வு ஓட்டம் வரும் 26 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் ராணிப்பேட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கும்.

சுமாா் 5 கி.மீ தொலைவு கொண்ட இதில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞா்கள், என்எஸ்எஸ், நேரு யுவ கேந்திரா, வீரா், வீராங்கனைகள், அரசு ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சீருடை வழங்கப்படும் இளைஞா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பொது மக்கள், இளைஞா்கள் திரளாக கலந்து கொண்டு ‘போதைபொருள் இல்லாத தமிழ்நாடு‘ உருவாக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ (அ) 74017 03462 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, திட்ட இயக்குனா் கு.செல்வராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.