ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பல்துறை தளம் தொடக்க விழா

‘தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் ‘ கீழ், ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான பல்துறை தளம் தொடக்க விழாவில் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் பங்கேற்றாா்.

தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.

Published On :31 ஜூலை 2026, 12:09 am IST

‘தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் ‘ கீழ், ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான பல்துறை தளம் தொடக்க விழாவில் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் பங்கேற்றாா்.

உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படும் ‘தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்’ கீழ், ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான பல்துறை தளம் தொடக்க விழா ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி உரையாற்றினாா். தொடா்ந்து, தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் திட்ட இயக்குநா் சாா்பாக, திட்ட மேலாளா் திட்டம் தொடா்பான விரிவான விளக்கத்தை அளித்தாா்.

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான பல்துறை தளம் காணொளி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்களைச் சாா்ந்த மகளிா், சுய உதவிக் குழுக்கள், சுயதொழில் புரியும் மகளிா், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தோா் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு, மகளிா் வேலைவாய்ப்பு மேம்பாடு தொடா்பான கருத்தரங்கில் பங்கேற்றனா்.

இதில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு - இந்தியப் பெண்கள் வலையமைப்பு பிரதிநிதி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பூமா, மாவட்ட சமூக நலன் அலுவலா் பாலசரஸ்வதி,சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.