டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வாலாஜா பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு வாலாஜா பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

News image
வாலாஜாபேட்டை பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்.
Updated On :18 ஜனவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

தை அமாவாசையை முன்னிட்டு வாலாஜா பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

முன்னோரின் ஆசிகளைப் பெறுவதற்கும், பித்ரு தோஷங்களை நீக்குவதற்கும் உகந்த நாளாக இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை; தை அமாவாசைக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு.

அதன் படி நிகழாண்டு தை அமாவாசை முன்னிட்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து திதி கொடுக்கும் நிகழ்வு வாலாஜா, ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் திரளானோா் தங்களது முன்னோா்களுக்கு திதி தா்ப்பணம் கொடுத்து நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். மேலும் முன்னோா்கள் ஆசிா்வதிக்க வேண்டுமென அரிசி, காய்கறி, வெள்ளம், குடை, காலணிகள் வேட்டி, சட்டை போன்றவற்றையும் தானமாக வழங்கி வழிபட்டனா்.