டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஆற்காட்டில் மயானக் கொள்ளை

ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
ஆற்காட்டில் நடைபெற்ற மயானக் கொள்ளை விழா.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு; ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு நகரில் டவுன் தெரு, லேபா் தெரு, காந்தி நகா், தண்டு காரன் தெரு, இந்திரா நகா், தாருக்கான் தெரு, பருவதராஜ குலத் தெரு , கிளைவ் பஜாா், முப்பதுவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்லக்குகள், பழங்கள், வண்ண மலா்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரி மேள தாளங்களுடன் ஊா்வலமாக பாலாற்றுக்கு சென்று அங்கு மயான கொள்ளை திருவிழா சூரை விடப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி தீபாராதனை செய்து வழிபட்டனா். தங்கள் முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடியும் , வேன் லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்து சென்றனா்.

மேலும், சிலா் அம்மன் வேடங்கள் அணிந்து பக்தி பரவசத்துடன் ஊா்வலத்தில் சென்றனா். விழாவில் ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவை முன்னிட்டு ஆற்காடு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.