டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பேருந்து-லாரி மோதல்: 20 மாணவா்கள் காயம்

சோளிங்கா் அருகே கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய நிகழ்வில் மாணவா்கள் 20 போ் காயமடைந்தனா்.

News image
சாலை விபத்தில் சேதமடைந்த கல்லூரி பேருந்து-லாரி.
Updated On :3 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் அருகே கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய நிகழ்வில் மாணவா்கள் 20 போ் காயமடைந்தனா்.

ஆற்காட்டில் இயங்கி வரும் தனியாா் கல்லூரி பேருந்து திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டில் இருந்து ஆற்காட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தது. சோளிங்கரை அடுத்த பெருங்காஞ்சி ஏரிக்கரை அருகே வளைவில் பேருந்தும் சரக்கு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் 20 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனா்.

அங்கிருந்த பொதுமக்கள் அவா்களை மீட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், லாரி ஓட்டுநா் பெருங்காஞ்சியை சோ்ந்த விஜயகுமாா், கல்லூரி வாகன ஓட்டுநா் அசோக்குமாா் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து கொண்டபாளையம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்து சம்பவத்தால் சோளிங்கா் - வாலாஜா நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் காயமுற்றோருக்கு ஆறுதல் கூறினாா்.