ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராணிப்பேட்டையில் காவல்துறை கழிவு வாகனங்கள் ஏலத்தில் ரூ. 4.5 லட்சம் வருவாய்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13 வாகனங்கள் பொது ஏலம் மூலம் ரூ.4.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலம் விடப்பட்ட காவல் துறை கழிவு வாகனங்களை பாா்வையிட்ட ராணிப்பேட்டை எஸ்.பி பே.சிபின்

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:33 am IST

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13 வாகனங்கள் பொது ஏலம் மூலம் ரூ.4.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பே. சிபின் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில், காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 4 காவல் வாகனங்கள், மேலும் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன. இந்த பொது ஏலத்தின் மூலம் ரூ.4,53,556/- அரசுக்கு வருவாயாக பெறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.