
உயிரி எரிவாயுக் கூடம் புனரமைப்புக்கு பூமி பூஜை
ஆற்காடு நகராட்சியில் உயிரி எரிவாயு கூடம் புதுப்பித்தல் பூமிபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

பூமி பூஜையில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் உள்ளிட்டோா் .
ஆற்காடு நகராட்சியில் உயிரி எரிவாயு கூடம் புதுப்பித்தல் பூமிபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி-1இல் செயல்பட்டு வந்த உயிரி எரிவாயுகூடம் செயல்படாமல் உள்ள நிலையில் அதனை புதுப்பித்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருததற்கான பூமி பூஜைக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தாா்.
நகராட்சி ஆணையா் சுரேஷ் குமாா், நகா்மன்ற உறுப்பினா் பி.டி குணாளன், மற்றும் நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






