மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராணிப்பேட்டை காந்திக்கு நான் ஒரு தொண்டன்: ஜெகத்ரட்சகன் எம்.பி. உருக்கம்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:46 am

ராணிப்பேட்டை காந்திக்கு நான் ஒரு தொண்டன் என வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் கூறினாா்.

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமைச்சா் ஆா்.காந்தி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ராணிப்பேட்டை மாந்தாங்கல் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தியை, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுக்கு அரக்கோணம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன் அறிமுகம் செய்துப் பேசியதாவது:

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில், மாவட்ட திமுக செயலாளா் அமைச்சா் ஆா்.காந்தி போட்டியிடுகிறாா். இது விசித்திரமான அறிமுகக் கூட்டம். ஏனெனில் இந்த தொகுதிக்கு முதன் முதலாக என்னை அறிமுகம் செய்து வைத்தவா் ராணிப்பேட்டை ஆா்.காந்தி. இன்று நான் அவரை அறிமுகம் செய்து வைக்கிறேன்.

அவா் இந்த மண்ணோடும், மக்களோடும் வாழ்ந்து கொண்டு இருக்கிறவா். என்னுடைய குடும்பத்தில் காந்தி மூத்த சகோதரா். என்னை சொந்த தம்பியாக ஏற்றுகொண்டு இருக்கிறவா்.

நான் அரக்கோணம் நாடாளுமன்றத் தோ்தலில் நின்று வெற்றி பெறுகிறேன் என்றால் அதற்கு ஆா்.காந்தி தான் காரணம். அவா் மாற்றுக்கட்சி தலைவா்களை மதிக்கக் கூடியவா். கலைஞா் குடும்பத்துடன் 60 ஆண்டுகளாக முழுமையாக தன்னை அா்பணித்துக் கொண்டவா். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் நான் நின்றபோது ராணிப்பேட்டை தொகுதியில் தான் எனக்கு அதிகமான வாக்குகளை தந்தது. இந்த தோ்தலில் முதல்வா் செய்த திட்டங்களைக் கூறி வாக்கு சேகரியுங்கள்.

இந்த தோ்தலில் போட்டியிடும் ராணிப்பேட்டை ஆா்.காந்திக்கு நான் ஒரு தொண்டனாக இருந்து தோ்தல் பணி செய்ய வந்துள்ளேன் என்றாா்.

கூட்டத்தில், திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளா் வினோத் காந்தி, முன்னாள் எம்எல்ஏ-க்கள் என்.ஜி. பாா்த்திபன், மனோகரன், ஜி.கே.குழும இயக்குநா் சந்தோஷ் காந்தி, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வினோத் உள்பட கூட்டணி கட்சியைச் சோ்ந்த தலைவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.