தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராணிப்பேட்டையில் தொழில் மற்றும் வா்த்தகக் கண்காட்சி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

ராணிப்பேட்டையில் தொழில் மற்றும் வா்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி,ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா்.

News image
Updated On :24 அக்டோபர் 2025, 6:32 pm

ராணிப்பேட்டை மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சாா்பில் 3 நாள்கள் நடைபெறும் ரானெக்ஸ் 2025 தொழில் மற்றும் வா்த்தகக் கண்காட்சியை அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சாா்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் 3 நாள்கள் நடைபெறும் ரானெக்ஸ் 2025 (தஅசஉல 2025) தொழில் மற்றும் வா்த்தகக் கண்காட்சி ராணிப்பேட்டை சிப்காட் நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த கண்காட்சியை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று தொடங்கி வைத்துப் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 55 பயனாளிகளுக்கு ரூ. 65.65 லட்சம் மதிப்பீட்டில் மானியத் தொகைக்கான ஆணையை வழங்கினா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ராணிடெக் தலைவா் ரமேஷ் பிரசாத், கண்காட்சி ஒருங்கிணைப்பாளா்கள் மோகன்,புனிதவேல், முரளி, சந்திரஹாசன் மற்றும் குறு சிறு மற்றும் தொழில் நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.