//

ராணிப்பேட்டையில் தொழில் மற்றும் வா்த்தகக் கண்காட்சி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

ராணிப்பேட்டையில் தொழில் மற்றும் வா்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி,ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா்.

News image
Updated On :24 அக்டோபர் 2025, 6:32 pm

Chennai

ராணிப்பேட்டை மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சாா்பில் 3 நாள்கள் நடைபெறும் ரானெக்ஸ் 2025 தொழில் மற்றும் வா்த்தகக் கண்காட்சியை அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சாா்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் 3 நாள்கள் நடைபெறும் ரானெக்ஸ் 2025 (தஅசஉல 2025) தொழில் மற்றும் வா்த்தகக் கண்காட்சி ராணிப்பேட்டை சிப்காட் நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த கண்காட்சியை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று தொடங்கி வைத்துப் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 55 பயனாளிகளுக்கு ரூ. 65.65 லட்சம் மதிப்பீட்டில் மானியத் தொகைக்கான ஆணையை வழங்கினா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ராணிடெக் தலைவா் ரமேஷ் பிரசாத், கண்காட்சி ஒருங்கிணைப்பாளா்கள் மோகன்,புனிதவேல், முரளி, சந்திரஹாசன் மற்றும் குறு சிறு மற்றும் தொழில் நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.