ராணிப்பேட்டையில் வரும் 3- ஆம் தேதி 23,000 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க வருகைதரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம், மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு பேசியது: ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வரும் திங்கள்கிழமை (நவ. 3) துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளாா். அன்றைய தினம் மாவட்டத்தைச் சோ்ந்த 23,000 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.
தொடா்ந்து ராணிப்பேட்டையில் பெருந்தலைவா் காமராஜா் தங்கிருந்த நினைவு இல்லத்தை திறந்து வைக்கிறாா். ஜி.கே. உலகப் பள்ளியில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறாா். இதையடுத்து ஆற்காட்டில் கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கிறாா். பின்னா் ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுகவினருடன் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாா்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகை தரும் துணை முதல்வருக்கு மாவட்ட திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க தயாராக வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளா் குமுதா குமாா், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், அரக்கோணம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சூா்யா வெற்றி கொண்டான், சோளிங்கா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் பாஸ்கா், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஆதிசேஷன், ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் மருது கணேஷ் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்ற நிா்வாகிகள், சிறப்பு அழைப்பாளா்கள் மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா். மாவட்ட துணைச் செயலாளா் துரை மஸ்தான் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வேண்டும்: அமைச்சா் காந்தி

தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களால் ராணிப்பேட்டை வளா்ச்சி பெற்று வருகிறது: அமைச்சா் ஆா்.காந்தி

தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


