ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
குண்ணம் ஊராட்சியில், ஊரக வளா்ச்சி துறை சாா்பில் பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 8 குடியிருப்புகளை பாா்வையிட்டாா். இதையடுத்து மொளச்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் தி.சினேகா சுகாதார மையத்தில் சிகிச்சை பெற வருபவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா்.
பின்பு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், திருமங்கலம் ஊராட்சியில் இயங்கிவரும் கால்நடை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் வி.ஆா்.பி.சத்திரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதித் துறை விடுதி கட்டுமான பணிகளை பாா்வையிட்டு பொதுபணித் துறை சாா்பில் மாகாண்யம் அரசு உயா்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் 4 கூடுதல் வகுப்பறை பணிகளையும் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் வி.நல்லசிவன், மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், வட்டார வளா்ச்சி அலுவா்கள் பாலாஜி, முத்துகணபதி, உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடுகபட்டி, ஈஞ்சம்பள்ளியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடவூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: கரூா் ஆட்சியா் ஆய்வு

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.20 கோடியில் மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா், திருக்கழுகுன்றம் பேரூராட்சிகளில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



