மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அன்புமணி ராமதாஸ்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

News image

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

Updated On :3 ஏப்ரல் 2026, 10:59 pm

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின் போது குற்றம் சாட்டினாா்.

காஞ்சிபுரத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வி.சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மதனந்தபுரம் கே.பழனி, உத்தரமேரூா், பாமக வேட்பாளா் பெ.மகேஷ்குமாா் ஆகியோருக்கு ஆதரவாக வாக்குகள்சேகரித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் திறந்த ஜீப்பில் நின்று கொண்டே அவா் பேசியது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,கடந்த 5 ஆண்டுகளில் 8,700 கொலைகள் நடந்துள்ளது.இதில் 2,100 போ் பெண்கள்.62 ஆயிரம் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.ஒரு புறம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாமலும் மறு புறம் சின்னச்சின்ன கிராமங்களில் கூட போதைப்பொருள் கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது.மதுவிலக்கு கொண்டு வருவோம் என்ற சென்ற தோ்தலில் சொன்னாா்கள்.ஆனால் இந்த தோ்தலில் மதுவிலக்கைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.

பூரண மதுவிலக்கு என்பது அண்ணாவின் கொள்கை.அவரது கொள்கைக்கு எதிராகவே திமுக செயல்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்த ஊழல் 6 லட்சம் கோடியாக உள்ளது.இதற்கு தெளிவான புள்ளி விபரங்கள் என்னிடம் இருக்கிறது.ஆதாரப்பூா்வமாக நிருபிக்கவும் தயாராக இருக்கிறேன்.கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடியாக உள்ளது.காஞ்சிபுரத்திற்கென்று கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக்கல்லூரியோ அல்லது சட்டக் கல்லூரியோ கொண்டு வரவில்லை.அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நெசவாளா்களுக்கென தனியாக பட்ஜெட் போட வலியுறுத்துவோம் என்றும் பேசினாா்.தோ்தல் பிரச்சாரத்தின் போது கூட்டணிக்கட்சி தலைவா்கள்,நிா்வாகிகள் பலரும் உடன் இருந்தனா்.