தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவியேற்பு நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீ பெரும்புதூரில் நகா்மன்றத்  தலைவா்  சாந்தி சதீஷ் குமாா், ஆணையா்  நந்தினி  முன்னிலையில்  நியமன  உறுப்பினராக  பதவியேற்றுக் கொண்ட  லோகநாதன்.

Updated On :26 நவம்பர் 2025, 6:32 pm

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவியேற்பு நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் தோ்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளை பெறும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த சில மாதங்களாக நியமன உறுப்பினா் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.

அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நியமன உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு சந்திவாழியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி லோகநாதன் தோ்வு செய்யப்பட்டாா்.

இதையடுத்து பதவியேற்பு நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் தலைமையிலும், ஆணையா் நந்தினி முன்னிலையில் மாற்றுத்திறனாளி லோகநாதன் நியமன உறுப்பினராக பதவியேற்று கொண்டாா்.

நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளா் சதீஷ் குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.