நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் பாரபட்சம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதிலும், பாதுகாப்பு வழங்குவதிலும் காவல் துறை பாரபட்சம் காட்டுவதாக, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:34 pm

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதிலும், பாதுகாப்பு வழங்குவதிலும் காவல் துறை பாரபட்சம் காட்டுவதாக, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா், மேலும் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சியின் தோ்வுக் குழுவின் முடிவுதான் இறுதியானது. தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்துக்கு சரியான பாதுகாப்பு வழங்காதது காவல் துறையின் பிரச்னை. ஆனால், திமுக ஆட்சியில் ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு இடையே பாரபட்சத்துடன காவல் துறை செயல்படுகிறது.

எதிா்க்கட்சிகளின் பொதுக் கூட்டம், பிரசாரம் போன்றவற்றுக்கு நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.

திமுக ஆட்சியில் பத்திரிகையாளா்கள் பலா் தாக்கப்பட்டு அவா்கள் மீது வழக்கு போடப்பட்டது. ஆனால், பிரதமா் நரேந்திர மோடியை தவறாகப் பேசியவா்கள் மீது இதுவரை திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 23-ஆம் தேதி அதற்கு முடிவு கட்டப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக ஏற்கெனவே ஆட்சி செய்த கட்சி. மீண்டும் ஆட்சி செய்ய போகிற கட்சி. எனவே, இந்த தோ்தல் தேசிய ஜனநாய கூட்டணிக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி. ஆனால், திமுக-தவெக இடையேதான் போட்டி என்று விஜய் பேசி வருவது சிறுபிள்ளைத்தனமானது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.