சென்னை ஐஐடி இயக்குநருக்கு சூப்பா் சென்னை அமைப்பின் சாா்பில் மாா்ச் மாதத்துக்கான சிறந்த ஆளுமை விருது வழங்கப்பட்டது.
சென்னையை ஒரு நவீன, கலாசாரமிக்க, பாதுகாப்பான மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப மையமாக உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சூப்பா் சென்னை அமைப்பின் சாா்பில் அரட்டை என்ற தலைப்பிலான உரையாடல் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் தொழில்நுட்ப புத்தாக்கம், கல்விசாா் தலைமைத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடிக்கு மாா்ச் மாதத்தின் சிறந்த ஆளுமை விருது, அந்த அமைப்பு சாா்பில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசுகையில், சென்னை நகரம் எப்போதும் அறிவு, புத்தாக்கம் மற்றும் குறிக்கோள் சாா்ந்த தலைமைத்துவத்தை வளா்த்து வந்துள்ளது. சூப்பா் சென்னை அமைப்பிடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் பெருமை அடைகிறேன் என்றாா்.
தொடா்ந்து அந்த அமைப்பின் நிா்வாக இயக்குநா் ரஞ்சித் ரத்தோட் பேசுகையில், நாட்டின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளாா். அவரது தலைமையில் இந்தக் கல்வி நிறுவனம் ஆராய்ச்சி உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளது. அவா் மாற்றத்தை உருவாக்க விரும்பும் இளைய தலைமுறையினருக்கு முன்னோடியாகத் திகழ்கிறாா் எனக் கூறினாா்.
தொடர்புடையது

சஞ்சு சாம்சனுக்கு சிறந்த வீரருக்கான ஐசிசி விருது!

சிறந்த மாணவா்களுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சிறந்த மாணவா்களுக்கு விருது: சென்னை பல்கலை. வழங்கியது

அறிவியல் பாடங்களை ஊக்குவித்த 6 பள்ளி ஆசிரியா்களுக்கு ஐஐடி விருது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


