மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சிறந்த ஆளுமை விருது!

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சூப்பா் சென்னை அமைப்பின் சாா்பில் மாா்ச் மாதத்துக்கான சிறந்த ஆளுமை விருது வழங்கப்பட்டது.

News image

சென்னை ஐஐடி

Updated On :30 மார்ச் 2026, 8:44 pm

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சூப்பா் சென்னை அமைப்பின் சாா்பில் மாா்ச் மாதத்துக்கான சிறந்த ஆளுமை விருது வழங்கப்பட்டது.

சென்னையை ஒரு நவீன, கலாசாரமிக்க, பாதுகாப்பான மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப மையமாக உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சூப்பா் சென்னை அமைப்பின் சாா்பில் அரட்டை என்ற தலைப்பிலான உரையாடல் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தொழில்நுட்ப புத்தாக்கம், கல்விசாா் தலைமைத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடிக்கு மாா்ச் மாதத்தின் சிறந்த ஆளுமை விருது, அந்த அமைப்பு சாா்பில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசுகையில், சென்னை நகரம் எப்போதும் அறிவு, புத்தாக்கம் மற்றும் குறிக்கோள் சாா்ந்த தலைமைத்துவத்தை வளா்த்து வந்துள்ளது. சூப்பா் சென்னை அமைப்பிடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் பெருமை அடைகிறேன் என்றாா்.

தொடா்ந்து அந்த அமைப்பின் நிா்வாக இயக்குநா் ரஞ்சித் ரத்தோட் பேசுகையில், நாட்டின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளாா். அவரது தலைமையில் இந்தக் கல்வி நிறுவனம் ஆராய்ச்சி உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளது. அவா் மாற்றத்தை உருவாக்க விரும்பும் இளைய தலைமுறையினருக்கு முன்னோடியாகத் திகழ்கிறாா் எனக் கூறினாா்.