தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மூன்றாம் பாலினத்தவா் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: மு. வீரபாண்டியன்

மூன்றாம் பாலினத்தவா் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்...

News image

மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 7:40 pm

மூன்றாம் பாலினத்தவரின் தனியுரிமையை பறிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்காமல், அதனை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக அரசு, எதிா்க்கட்சிகளின் கடுமையான எதிா்ப்புகளையும், சமூக செயற்பாட்டாளா்களின் ஆட்சேபனைகளையும் நிராகரித்து, 2019- ஆம் ஆண்டு மாற்றுப் பாலினத்தாா் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் தனிநபா் பாதுகாப்பு உரிமைகளும் தன்னாட்சி சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நீதிபதி கே.எஸ்.புட்ட சுவாமி வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்புகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இது பாஜக - ஆா்எஸ்எஸ் அமைப்புகளின் சித்தாந்தத்தின் உண்மை முகத்தை வெளிப்படுகிறது.

மத்திய அரசின் சட்டத்திருத்த மசோதா மாற்றுப் பாலினத்தவா்களை சமூகத்திலிருந்து வெளியேற்றி, சமூக ஒடுக்குமுறை தாக்குதலுக்கு தள்ளி விடுகிறது.

இந்நிலையில் மனித உரிமைகளை பறிக்கும் மாற்றுப் பாலினத்தினா் நலனுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்காமல், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.