பூண்டி ஏரியிலிருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டதால், புழல் ஏரிக்கு நீா் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் நீா் அளவு சரிந்து வந்ததால், பூண்டி ஏரியிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வந்த தண்ணீா் நிறுத்தப்பட்டதால், புழல் ஏரிக்கு நீா் வரத்து முற்றிலும் நின்றது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது, 2652 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 18.23 அடி உயரத்துக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது.
சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டதால், சனிக்கிழமை வரை 210 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து 182 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 538 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்புள்ளது.
தொடர்புடையது

மேட்டூா் அணை நீா்மட்டம்: 81.27 அடி

நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்

வைகை அணையின் நீா்மட்டம் 35 அடியாக சரிவு: மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


