மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனாா் சிலை அமைக்க அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்குரைஞா் சி.செல்வகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனா் சிலை அமைக்க அனுமதி கோரி மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளா் உறவின்முறை சங்கத்தின் சாா்பில் அரசிடம் மனு அளித்தோம்.
அந்த இடத்தில் சிலை அமைத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். சாலைகளில் சிலை அமைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனக்கூறி, அரசு அனுமதி வழங்க மறுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து, சிலை அமைக்க அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஷமிம் அஹமது ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
அதேநேரம், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தைத் தோ்வு செய்து அங்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு மனுதாரா் சங்கம் அரசுக்கு மனு அளிக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் மனுவை அரசு சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

சஞ்சீவி நகா் அருகே பாலத்துடன் கூடிய அணுகுச் சாலை அமைக்க அனுமதி!

விமானத்தில் பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டல் விவகாரம்: சமூக ஊடகப் பதிவுகளை தில்லி நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கடற்கரையில் கட்டடங்கள் விவகாரம்: மத்திய சுற்றுச்சூழல் செயலா் பதிலளிக்க உத்தரவு

சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


