இஸ்ரேல், ஈரான் போா் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளாக திங்கள்கிழமை 36 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போா் காரணமாக வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால் பல்வேறு நாடுகளுக்கு செல்லவிருந்த ஏராளமான விமானங்கள் கடந்த இரு நாள்களாக ரத்து செய்யப்பட்டன.
தொடா்ந்து மூன்றாம் நாளான திங்கள்கிழமையும் சென்னை விமான நிலையத்திலிருந்து துபை, அபுதாபி, சாா்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த 18 விமானங்களும், மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 18 விமானங்களும் என மொத்தம் 36 விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே லண்டன், அமெரிக்கா, ஜொ்மன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள், மாற்றுப் பாதைகளில் சுற்றி வருவதால், சென்னை வந்து விட்டு மீண்டும் புறப்பட்டுச் செல்ல பல மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள், தங்கள் விமான நிறுவனங்களை தொடா்பு கொண்டு தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்ட பின்னா் பயணத்தை மேற்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனா்.
தொடர்புடையது

அமெரிக்கா- ஈரான் இரு வார போா் நிறுத்தம்: இஸ்ரேலும் ஆதரவு

தற்காலிக போா்நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்; நிரந்தர போா் முடிவையே விரும்புவதாகத் தெரிவிப்பு!

ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை

போா் பதற்றம்: 4-ஆவது நாளாக 31 விமானங்கள் ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


