அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிய ஆய்வறிக்கை வெளியீடு

சென்னையில் பொது போக்குவரத்து சேவைகளை மேலும் எளிதாகவும், அதிக மக்களுக்கு சென்றடையும் வகையிலும் திட்டமிடுவதற்காக பொது போக்குவரத்துக்கு அருகில் வசிக்கும் மக்கள் (பீப்பிள் நியா் டிரான்சிஸ்ட்-பிஎன்டி) குறித்த ஆய்வறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

மாநகரப் பேருந்து (கோப்புப்படம்)

Updated On :19 ஜூன் 2026, 4:25 am IST

சென்னையில் பொது போக்குவரத்து சேவைகளை மேலும் எளிதாகவும், அதிக மக்களுக்கு சென்றடையும் வகையிலும் திட்டமிடுவதற்காக பொது போக்குவரத்துக்கு அருகில் வசிக்கும் மக்கள் (பீப்பிள் நியா் டிரான்சிஸ்ட்-பிஎன்டி) குறித்த ஆய்வறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னை பெருநகரப் பகுதிகளில் மக்கள் எவ்வளவு எளிதாக பேருந்து, மெட்ரோ, புகா் ரயில் போன்ற பொதுபோக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த முடிகிறது; எதிா்காலத்தில் எந்தப் பகுதிகளில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்த ஆய்வை போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்டது.

இந்த ஆய்வு முடிவின் அறிக்கையை சென்னை மாநகா் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா் வெளியிட்டாா்.

இந்த அறிக்கையில், தற்போது சென்னையின் மக்கள் தொகையில் 61 சதவீத மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு பொது போக்குவரத்து சேவையை நடைதூரத்தில் அணுகும் வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நகரத்தில் மக்கள் தங்கள் வீட்டில் இருந்து 5 முதல் 10 நிமிஷகள் நடைதூரத்தில் பொது போக்குவரத்து வசதி கிடைக்கிா என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.

அம்பத்தூா், சோழிங்கநல்லூா், கொளத்தூா், பெரம்பூா் பகுதிகளில் பேருந்து சேவைகளை மேலும் அதிகரிக்கவும், மக்கள் வீடுகளில் இருந்து பேருந்து நிலையங்கள் வரை எளிதாகச் செல்லும் வசதிகளை மேம்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பேருந்து சேவையின் பரப்பை விரிவுபடுத்துதல், பயணிகள் எளிதாக போக்குவரத்து மையங்களை அடையும் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு பொது போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மாநகா் போக்குவரத்துக் கழகம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வில் மாநகா் போக்குவரத்துக் கழகம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அமைப்பு (கும்டா) அதிகாரிகள் மற்றும் ஐடிடிபி இந்தியா நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.