அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அங்கீகரித்துள்ளாா்.
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க ஒரு குழுவும், எஸ்.பி.வேலுமணியை அங்கீகரிக்க மற்றொரு குழுவும் தனித்தனியாக பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்ததால் யாருக்கு இந்தப் பதவி அளிப்பது என்ற கேள்வி எழுந்தது. இதனால், பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் இருந்தாா்.
மேலும், அதிமுக கொறடா உத்தரவை மீறி பேரவையில், தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு ஆதரவாக வேலுமணி தரப்பில் 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனா்.
பின்னா், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகிய இரு தரப்பும் சமரசம் அடைந்தனா். அதன் பிறகு, பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பினா், அதிமுக பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்பு சாா்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களை மன்னிக்க வேண்டும் என்று மனு அளித்தனா்.
இதையடுத்து, ராஜிநாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பேரவைத் தலைவா், மற்ற அதிமுக எம்எல்ஏக்களுக்கு மன்னிப்பு அளிப்பதாக அறிவித்தாா்.
இந்த நிலையில், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை பேரவைத் தலைவா் அங்கீகரித்துள்ளாா். அக்கட்சியின் தலைமை கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூா்த்தியையும் அங்கீகரித்து அதிகாரபூா்வ அறிவிப்பை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் வெளியிடவுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கமளிக்க பேரவைத் தலைவா் உத்தரவு

அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்

அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்







