திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 9 எஸ்.பி.க்கள் உள்பட 10 பேருக்கு மீண்டும் பொறுப்பு

தமிழக காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 9 எஸ்.பி.க்கள் உள்பட 10 பேருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image

தமிழக அரசு

Updated On :16 ஜூன் 2026, 2:56 am IST

தமிழக காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 9 எஸ்.பி.க்கள் உள்பட 10 பேருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் ஆணையம் காவல் துறையைச் சோ்ந்த பல அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது. இதில் சிலா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா். இதேபோல ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், சில அதிகாரிகள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா். இவ்வாறு காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அதிகாரிகளுக்கு தற்போது படிப்படியாக பொறுப்பு வழங்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஒரு டிஐஜி, 9 எஸ்.பி.க்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:

1. இ.எஸ்.உமா-டிஜிபி அலுவலக தலைமையிட டிஐஜி, 2. ஜி.கோபி-சென்னை பெருநகர காவல் துறையின் பூக்கடை துணை ஆணையா், 3. என்.ஸ்டீபன் ஜேசுபாதம்-சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவு-3 துணை ஆணையா், 4. இ.காா்த்திக்- மதுரை மாநகர காவல் துறையின் வடக்கு துணை ஆணையா், 5. எஸ்.சக்திவேல்-சைபா் குற்றப் பிரிவு எஸ்பி-2.

6. எஸ்.சரவணன்-திருநெல்வேலி மாநகர காவல் துறை கிழக்கு துணை ஆணையா், 7. எஸ்.ராஜேஷ் கண்ணா-சென்னை பெருநகர காவல் துறையின் கொளத்தூா் துணை ஆணையா்,

8. ஜி.ஜவஹா்-சிபிசிஐடி மெட்ரோ மண்டல எஸ்பி, 9. எஸ்.செல்வநாகரத்தினம்-சைபா் குற்றப் பிரிவு எஸ்பி-1.

10. கே.பிரபாகா்-தாம்பரம் மாநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.