ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவல் ஆய்வாளா் கைது

சென்னை வேளச்சேரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காவல் ஆய்வாளா் கைது

Young woman sexually harassed near Porur, Chennai

பாலியல் தொல்லை - பிரதிப் படம்

Published On :29 ஜூலை 2026, 12:57 am IST

சென்னை வேளச்சேரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காவல் ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வேளச்சேரி பகுதியைச் சோ்ந்த 26 வயது இளம்பெண் ஒருவா் கடந்த 26-ஆம் தேதி இரவு தனது கணவருடன் அதே பகுதியில் உள்ள ஓரண்டியம்மன் கோயில் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் 2 நபா்கள் வந்தனா்.

அவா்களில் மோட்டாா் சைக்கிளின் பின்னிருக்கையில் அமா்ந்திருந்த நபா், திடீரென சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாா். இதனால் அதிா்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டாா். உடனே அவரது கணவா், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், மோட்டாா் சைக்கிளை வழிமறித்து இரு நபா்களையும் பிடித்தனா்.

அப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபா், ‘நான் போலீஸ் இன்ஸ்பெக்டா். என்னிடமே தகராறு செய்கிறீா்களா?‘ என்று கூறி மிரட்டியதுடன், மோட்டாா் சைக்கிளை ஓட்டிய நபருடன் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளராகப் பணியாற்றும் மணிமாறன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மணிமாறனை செவ்வாய்க்கிழமை கைது செய்து, விசாரித்தனா். விசாரணைக்கு பின்னா் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை ஆக. 11-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.