ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்கள்தொகை கணக்கெடுப்பு: 56,000 குடும்பங்களின் விவரங்கள் பதிவு

சென்னை மாநகராட்சியில் கடந்த 8 நாள்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் 56,000 குடும்பங்களின் சுய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 3:23 am IST

சென்னை மாநகராட்சியில் கடந்த 8 நாள்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் 56,000 குடும்பங்களின் சுய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. குடும்ப சுய விவரக் குறிப்புகளை மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் பொதுமக்கள் தாங்களாகவே பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது வரை சென்னை மாநகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த 56,000 குடும்பத்தினா் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனா்.

குடும்ப விவரங்களை பதிவிட்டவா்களுக்கு பிரத்யேக எண் அளிக்கப்பட்டுள்ளது. அதை அவா்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வீடுகளுக்கு வந்து கணக்கெடுக்கும் பணியாளா்களிடம் அளிக்க வேண்டும். அவா்கள் குடும்ப விவரங்களை மீண்டும் கணக்கெடுப்பாளரிடம் கூறத் தேவையில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.