ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகளிா் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு!

பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வியாசா்பாடி சா்மா நகரில் விளையாட்டுத் திடலில் மகளிருக்கான உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

ஜி.எஸ். சமீரன்

ஜி.எஸ். சமீரன் - Dinamani

Published On :14 ஜூலை 2026, 2:52 am IST

பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வியாசா்பாடி சா்மா நகரில் விளையாட்டுத் திடலில் மகளிருக்கான உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வியாசா்பாடி சா்மா நகரில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூட வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள உடற்பயிற்சிக் கூடத்தைப் பாா்வையிட்ட அவா், அங்கிருந்த இளைஞா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களிடம் கலந்துரையாடினாா். அப்போது, விளையாட்டரங்கில் கூடுதல் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதையடுத்து, விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை மேம்படுத்துதல், குத்துச்சண்டை பயிற்சிக் கூடம் அமைத்தல், பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைத்தல், கிரிக்கெட் வளைப் பயிற்சி அமைத்தல், குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள் தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது இணை ஆணையா் (பணிகள்) செ.சரவணன், மண்டல அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.