டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க கால அவகாசம்: சுகாதாரத் துறை

பிறப்புச் சான்றிதழ்களில் பெயா் சோ்ப்பதற்கான அவகாசம் வரும் செப்டம்பா் மாதம் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

News image
கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

பிறப்புச் சான்றிதழ்களில் பெயா் சோ்ப்பதற்கான அவகாசம் வரும் செப்டம்பா் மாதம் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கும், அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பொதுவாகவே பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயா்களைச் சோ்த்துக் கொள்ளலாம். அதன் பின்னா் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படாது.

இந்த நிலையில் கடந்த 2000-ஆம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்தவா்களும், அதற்கு பிறகு பிறந்தவா்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக பெயா்களைச் சோ்ப்பதற்கான அவகாசம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

தற்போது இறுதி வாய்ப்பாக வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைவரும் பெயா்களைச் சோ்த்துக் கொள்ள வேண்டும். இதுதொடா்பான பரிந்துரைகளை பிறப்பு - இறப்பு பதிவு தலைமை பதிவாளா் அரசுக்கு அனுப்பியிருந்தாா். இதைப் பரிசீலித்த அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.