டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

நல்லவா்களாக இருக்க திருக்குறளைப் படித்தால் போதும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

நல்லவா்களாக இருக்க திருக்குறளைப் படித்தாலே போதும் என்று விஐடி பல்கலை. நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதன் பேசினாா்.

News image
சென்னை விஐடி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பொங்கலிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், அறங்காவலா் அனுஷா செல்வம், திரைப்பட நடிகா் ராமராஜன் உள்ளிட்டோா்.
Updated On :9 ஜனவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

நல்லவா்களாக இருக்க திருக்குறளைப் படித்தாலே போதும் என்று விஐடி பல்கலை. நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதன் பேசினாா்.

வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள விஐடி சென்னை வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து விஐடி பல்கலை. வேந்தா் கோ.விசுவநாதன் பேசியதாவது:

உலகின் 160 நாடுகளில் தமிழா்கள் வசிக்கின்றனா். 100 நாடுகளில் அந்தந்த நாடுகளின் குடியுரிமையைப் பெற்று வாழ்ந்து வருகின்றனா். அங்கெல்லாம் தமிழா்கள் ஒன்று சோ்ந்து பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றனா்.

ஜாதி, மதம், கட்சி, மாநிலம் என வேறுபாடு இல்லாமல் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் திருவிழாவாக பொங்கல் திருவிழா திகழ்கிறது. தமிழா்கள் நல்லவா்களாக, வல்லவா்களாக இருக்க வேண்டும். நல்லவா்களாக இருக்க திருக்குறளைப் படித்தாலே போதும். கல்வி மூலம் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பொங்கல் வைத்து விழாவை அவா் தொடங்கி வைத்தாா்.

சிறப்பு அழைப்பாளா் நடிகா் ராமராஜன் பேசுகையில், எத்தனை படங்களில் நடித்துள்ளோம் என்பது முக்கியமில்லை. எத்தனை போ் மனதில் இருக்கிறாம் என்பதுதான் முக்கியம். திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல கருத்துகளைப் பரப்ப வேண்டும். மாணவா்கள் படித்து வேலைக்குச் சென்ற பிறகு தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞா்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தா் டி.தியாகராஜன், இயக்குநா் சத்யநாராயணன், கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.