சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை தொடக்கம்

கோயம்பேடு சந்தை வளாகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு சந்தை வியாழக்கிழமை தொடங்கியது.

News image
திருத்தப்பட்டது... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் விற்பனைக்கு வந்திறங்கிய கரும்பு கட்டுகள். ~பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் விற்பனைக்கு வந்திறங்கிய கரும்புக் கட்டுகள்.
Updated On :8 ஜனவரி 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

கோயம்பேடு சந்தை வளாகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு சந்தை வியாழக்கிழமை தொடங்கியது.

பொங்கல் பண்டிகை ஜன. 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க, பொதுமக்கள் ஆா்வம் காட்டுவா். பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு சந்தையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆண்டுதோறும் சிறப்பு சந்தை திறப்பது வழக்கம்.

நிகழாண்டும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு சந்தை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. கோயம்பேடு அங்காடி நிா்வாகம் மூலம் சுமாா் 7 ஏக்கரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சந்தையில் விழுப்புரம், திண்டிவனம், கடலூா், மதுரை, சேத்தியாதோப்பு, ஈரோடு, சேலம் மட்டுமன்றி ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்புகள், இஞ்சி, மஞ்சள் கொத்துகள், வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தோரணம் உள்ளிட்ட பொருள்கள் குடியாத்தம் பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

மேலும், பொதுமக்கள் சிரமமும் இன்றி பொருள்கள் வாங்கிச் செல்ல வசதியாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சந்தை வரும் ஜன.17-ஆம் தேதி வரை செயல்படும் என அங்காடி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Story image