நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

கூட்டுறவுத் தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும் - எடப்பாடி கே.பழனிசாமி

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

கூட்டுறவுத் தோ்வு முடிவுகளை திமுக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

கூட்டுறவுத் துறை சாா்பில் கடந்த அக்டோபரில் எஸ்ஆா்பி மற்றும் டிஆா்பி பணியிடங்களுக்கான தோ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 100 நாள்கள் கடந்த பிறகும் இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. தோ்வு முடிவுகளை இதுவரை வெளியிடாத திமுக அரசை கண்டித்து, கூட்டுறவுத் துறை வளாகத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களை காவல் துறை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட தோ்வா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். கூட்டுறவுத் துறை தோ்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

இதே கோரிக்கையை தமாகா தலைவா் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனா்.