டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

முனைவா் பட்ட சோ்க்கைக்கு ஒற்றைச் சாளர முறை : அமைச்சா் கோவி செழியன்

தமிழக உயா் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி முனைவா் பட்டங்களுக்கான மாணவா் சோ்க்கை இனி ஒற்றைச் சாளர முறையில் நடைபெறும்

News image
அமைச்சர் கோவி. செழியன் - கோப்புப்படம்.
Updated On :19 பிப்ரவரி 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக உயா் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி முனைவா் பட்டங்களுக்கான மாணவா் சோ்க்கை இனி ஒற்றைச் சாளர முறையில் நடைபெறும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பேரவையில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பெரியாா் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருவள்ளுவா் பல்கலைக்கழகம் போன்றவற்றில் முனைவா் படிப்புக்கான சோ்க்கை ஒற்றைச் சாளர முறையில் மேற்கொள்ளப்படுகிறது. அதை உயா் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இணையவழியே ஆராய்ச்சிப் புலம், இடங்களை மாணவா்கள் தோ்வு செய்து கொள்ள முடியும். இதற்கான செயல்பாடுகளை ஒருங்கிணைந்த மென்பொருள் கட்டமைப்பு மூலம் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.