தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சென்னையில் வருகிறது ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்

சென்னையில் வருகிறது ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்

News image

ரூப் டாப் ஓப்பன் பேருந்து - ENS

Updated On :17 பிப்ரவரி 2026, 9:37 am

சென்னை, பிப்.16: சென்னையில் பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் தமிழக அரசும் போக்குவரத்துத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சென்னை நகரின் பழைமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கண்டு மகிழ ‘சென்னை உலா’ என்ற பழைமை மாறாமல் உருவாக்கப்பட்ட சுற்றுலாப் பேருந்துகளை மாநகா் போக்குவரத்துக்கழகம் இயக்கி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் விதமாக, இரண்டு அடுக்கு பேருந்தையும் சுற்றுலா வளா்ச்சிக்கழகம் இயக்கி வருகிறது.

இந்த நிலையில், பயணிகள் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகளை, அதாவது இரண்டு அடுக்கு கொண்ட பேருந்தின் மேல் பகுதி மட்டும் திறந்த நிலையில் இருக்கும் வகையிலான பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரி கூறியதாவது:

சென்னை மாநகரில் 20 இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்குவதற்கான ஒப்பந்தம் ஏற்கெனவே வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 20 பேருந்துகளும் குளிா்சாதன வசதி கொண்டபேருந்துகளாக ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இதில் 4 பேருந்துகளை ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகளாக மாற்றி உபயோகப்படுத்த மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தத்தில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒப்பந்த காலம் 12 ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்குவது மட்டுமன்றி பராமரிப்பு, சாா்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவையும் தொடா்புடைய நிறுவனமே மேற்கொள்ளும். விரைவில் ‘ரூப் ஓப்பன் டாப்’ பேருந்துகள் சென்னை சாலையில் வலம் வர உள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.