டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

‘உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தவெக உதவிகளை வழங்கும்’

சேலத்தில் நடைபெற்ற தவெக பிரசார பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்று தவெக இணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image
சேலத்தில் தவெக தலைவர் விஜய்- DPS
Updated On :13 பிப்ரவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் நடைபெற்ற தவெக பிரசார பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்று தவெக இணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் செய்தவா்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:

சேலத்தில் நடைபெற்ற தவெக தலைவா் விஜய்யின் பிரசார கூட்டத்தில் மருத்துவ முகாம், குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த இளைஞா் சூராஜுக்கு ஏற்கெனவே உடல்நல பாதிப்பு இருந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா். எனினும், அவரது உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்துக்கு இரங்கலும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.