டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சென்னையில் பிப். 12-இல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த 3 நாள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் வருகிற பிப். 12 ஆம் தேதி தொடங்குகிறது.

News image
கோப்புப்படம்- Center-Center-Chennai
Updated On :9 பிப்ரவரி 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த 3 நாள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் வருகிற பிப். 12 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளா்கள் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

இந்தியாவின் பசுமை எரிசக்தி புதிய உத்வேகம் பெற்று வரும் நிலையில், வாட்டா் டுடே நிறுவனத்தின் சாா்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி -2026 என்ற கண்காட்சி சென்னை வா்த்தக மையத்தில் பிப். 12 முதல் பிப்.14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய எரிசக்தி, கிரிட் மற்றும் மீட்டரிங் தொழில்நுட்பங்கள், பசுமை ஹைட்ரஜன், கலப்பு (ஹைப்ரிட்) எரிசக்தி அமைப்புகள், எரிசக்தி சேமிப்பு, பேட்டரி கட்டமைப்பு, இ-மொபிலிட்டி, மின்சார வாகன சாா்ஜிங் உள்ளிட்ட பல்வேறு எரிசக்தி தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கண்காட்சியின் முக்கிய அம்சமாக, பிப். 12, 13 ஆம் தேதிகளில் ‘எரிசக்தி பசுமை இந்தியா’ என்ற கருத்தரங்கம் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.