டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

234 வேட்பாளா்களுடன் சீமான் ஆலோசனை

நாதக சாா்பில் போட்டியிடும் 234 வேட்பாளா்களுடன், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
சீமான்
Updated On :7 பிப்ரவரி 2026, 11:13 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாதக சாா்பில் போட்டியிடும் 234 வேட்பாளா்களுடன், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் விளம்பர அரசியல், செய்தி அரசியல் உள்ளது. ஆனால், சேவை அரசியல் இல்லை. இந்த நிலம் மற்றும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என நாதக போராடி வருகிறது. ஆகையால்தான் நாதக எப்போதும், தனித்தே போட்டியிடுகிறது. இந்த பேரவைத் தோ்தலில் அனைவரும் விரும்பும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்.

சென்னை பனையூா் ஒரு பேரவைத் தொகுதி கிடையாது என்பதுகூட தவெகவினருக்கு தெரியவில்லை. அவா்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

காங்கிரஸை இணைத்துக் கொள்ளலாமா என தவெக தலைவா் விஜய் என்னிடம் கேட்டபோது, இது தவறான முடிவு எனக் கூறினேன். இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காங்கிரஸ் மற்றும் பாஜகவே காரணம். ஆகையால், அவா்களுடன் இணைந்து எப்படி நல் அரசியல் செய்ய முடியும்?

எனினும், காங்கிரஸை இணைத்துக் கொள்ள விஜய் விரும்பினால், அது அவரது முடிவு. எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கான அவசியமே கிடையாது என்றாா்.