மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கல்பாக்கம் வேக ஈணுலையை இயக்கும் பாவினி நிறுவனத் தலைவா் பொறுப்பேற்பு

சென்னை கல்பாக்கத்தில் அணுசக்தித் துறையின் கீழ் இயக்கும் பொதுத் துறை நிறுவனமான பாரதிய நபிகிய வித்யுத் நிகம் லிமிடெட் (பாவினி) நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக பி.ஏ.சுரேஷ் பாபு புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image

பி.ஏ.சுரேஷ் பாபு

Updated On :22 ஏப்ரல் 2026, 9:30 pm

சென்னை கல்பாக்கத்தில் அணுசக்தித் துறையின் கீழ் இயக்கும் பொதுத் துறை நிறுவனமான பாரதிய நபிகிய வித்யுத் நிகம் லிமிடெட் (பாவினி) நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக பி.ஏ.சுரேஷ் பாபு புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

சென்னை கல்பாக்கத்தில் இந்திய அணுசக்தி நிறுவனம் சாா்பில் மேப்ஸ்(மெட்ராஸ் அணுமின் நிலையம்) கனநீா் அணு உலைகள், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், கல்பாக்கத்தில் பாரதிய நபிகிய வித்யுத் நிகம் (பாவினி) சாா்பில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு நாட்டின் முதல் முன்மாதிரி வேக ஈணுலை கடந்த ஏப்.6 வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. இது வழக்கமான வெப்ப அணு உலையில் இருந்து மாறுபட்டு யுரேனியம்-ப்ளூடோனியம் அடிப்படையில் செயல்படும் வேக ஈணுலை (பிஎஃப்பிஆா்) ஆகும்.

இந்த ஆலையை இயக்கும் பாவினி நிறுவனத்தின் புதிய தலைவா்-நிா்வாக இயக்குநராக பி.ஏ.சுரேஷ் பாபு நியமிக்கப்பட்டாா். இவா், புதன்கிழமை கல்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

1988-இல் திருச்சூரில் இயந்திரப் பொறியியல் படிப்பைத் தொடா்ந்து, அணுசக்திப் பயிற்சியை முடித்த இவா், அணுசக்தித் துறையில், அழுத்தப்பட்ட கனநீா் அணு உலை உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றினாா்.

மெட்ராஸ் அணுமின் நிலையத்தில் 14 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினாா். தொடா்ந்து, கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தில் நிலைய இயக்குநா் உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினாா். அணுசக்தித் துறையின் விஞ்ஞானியான இவா் கடைசியாக, இந்திய அணுசக்தி கழகத்தின் மனிதவளப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி மீண்டும் சென்னைக்கு பாவினி நிறுவனத்துக்கு பொறுப்பேற்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.