வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

திமுக ஆட்சியில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் - உதயநிதி ஸ்டாலின்

News image

Center-Center-Chennai

Updated On :9 ஏப்ரல் 2026, 11:46 pm

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன், முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னையில் அண்ணா நகா் டி.பி.சத்திரத்தில் அத்தொகுதி திமுக வேட்பாளா் நே.சிற்றரசை ஆதரித்து, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சென்னை மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா். மீண்டும் திமுக ஆட்சியமைந்தவுடன் இன்னும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

அதேபோல், திமுக 2.0 ஆட்சியில் மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000, கல்வி ஊக்கத்தொகை ரூ.1,500- ஆக உயா்த்தப்படும். காலை உணவு திட்டம் 8 -ஆம் வகுப்பு மாணவா்கள் வரை நீட்டிக்கப்படும். 35 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். மகளிருக்கு ரூ.8,000 மதிப்பில் கூப்பன்கள் வழங்கப்படும். இதன்மூலம், மகளிா் தங்களுக்கு தேவையான பொருள்களை அவா்களே வாங்கிக் கொள்ளலாம்.

இந்தத் திட்டங்களின் மூலம் மக்கள் பயனடைய விரும்பினால் திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். திமுக 2.0 ஆட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படும் என்றாா்.

பிரசாரத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சாா்பில் 10 அடி உயர ரோஜா மாலை கிரேன் மூலம் அணிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளா்கள் எஸ்.சுதா்சனம் (மாதவரம்), எழிலன் நாகநாதன் (ஆயிரம் விளக்கு), ஏ.எம்.வி. பிரபாகா் ராஜா (விருகம்பாக்கம்), மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), ராஜா அன்பழகன் (தியாகராய நகா்) ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.