மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? - உயா்நீதிமன்றம்

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

News image

ஐபிஎல் கோப்பை - (கோப்புப்படம்)

Updated On :2 ஏப்ரல் 2026, 11:18 pm

ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வாக்காளரான பிரபாகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது முறையல்ல. எனவே, சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை ஆஜரான மனுதாரா் முறையிட்டாா். இந்த முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுத்தனா். மேலும், சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லாதபோது கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? என கேள்வி எழுப்பினா்.

மனுதாரா் கிரிக்கெட் போட்டியைப் பாா்க்க விரும்பாவிட்டால் வீட்டிலேயே இருக்கவும். இந்தப் போட்டிகளை நடத்துவதால் மனுதாரருக்கு என்ன பிரச்னை ஏற்படப் போகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். பின்னா், வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.