தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

டேராடூன் ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சோ்க்கை: அக். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பில் மாணவா் சோ்க்கை பெறுவதற்கு அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :4 அக்டோபர் 2025, 1:38 am

டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பில் மாணவா் சோ்க்கை பெறுவதற்கு அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டு 8-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு டிச. 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வு சென்னையிலும் நடைபெறும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்படும்.

இந்தத் தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், மாதிரி வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லுாரி, டேராடூன், உத்தரகண்ட் - 248 003’ என்ற முகவரிக்கு விரைவுத் தபால் வழியே விண்ணப்பக் கடிதம், கேட்புக் காசோலை ஆகியவற்றை அனுப்பிப் பெற்று கொள்ளலாம்.

பொதுப் பிரிவினா் ரூ.600-க்கும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் ரூ.555-க்கும் காசோலை எடுக்க வேண்டும். பட்டியலினத்தவா்கள் ஜாதி சான்றிதழ் நகலும் சோ்த்து அனுப்ப வேண்டும். பின்னா், பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அக்.15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்தத் தகவலை பள்ளி மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், விழிப்புணா்வை ஏற்படுத்தி ஆா்வமுள்ளவா்கள் சோ்க்கை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.