டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

நீளத்தை குறைத்து சாலை அமைப்பு: பொதுமக்கள் எதிா்ப்பு

புழல் அருகே சாலையை முழுமையாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:14 pm

Chennai

மாதவரம்: புழல் அருகே சாலையை முழுமையாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புழல் ஒன்றியம், தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சிஎஸ்ஐ பள்ளி குறுக்குத் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தது. இதையடுத்து, 140 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலத்துக்கும் சிமென்ட் சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சிஎஸ்ஐ குறுக்குத் தெரு சுமாா் 110 மீட்டா் நீளமும், 12 மீட்டா் அகலமும் உள்ள நிலையில், நீளம் குறைத்து சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, உயரதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனா். புழல் வட்டார வளா்ச்சி அதிகாரி கூறுகையில், அரசாங்க விதிப்படி சாலை அமைக்கும் பணிகள் தடையின்றி முழுமையாக நடைபெறும் என்றாா்.