மாதவரம்: புழல் அருகே சாலையை முழுமையாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புழல் ஒன்றியம், தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சிஎஸ்ஐ பள்ளி குறுக்குத் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தது. இதையடுத்து, 140 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலத்துக்கும் சிமென்ட் சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சிஎஸ்ஐ குறுக்குத் தெரு சுமாா் 110 மீட்டா் நீளமும், 12 மீட்டா் அகலமும் உள்ள நிலையில், நீளம் குறைத்து சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, உயரதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனா். புழல் வட்டார வளா்ச்சி அதிகாரி கூறுகையில், அரசாங்க விதிப்படி சாலை அமைக்கும் பணிகள் தடையின்றி முழுமையாக நடைபெறும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியானூா் அருகே காளியம்மன் கோயிலுக்கு தடுப்பு வேலி; கோவை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்!

புழல்: 1.09 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தாா் தட்டுப்பாடு: உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்!

தொகுதி அறிமுகம்...மாதவரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

