சென்னை மெரீனா கடற்கரையில் கடை ஒதுக்கக் கோரி திருவல்லிக்கேணியைச் சோ்ந்த தேவி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மெரீனா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்த சென்னை மாநகராட்சியிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? சாலையோர வியாபாரிகளின் பிரச்னை எவ்வாறு தீா்க்கப்படுகிறது? இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா், மாநகராட்சி ஆணையா், காவல் ஆணையருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.