டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

மெரீனா கடற்கரை விவகாரம்: வனத் துறை முதன்மைச் செயலா், மாநகராட்சி ஆணையா் ஆஜராக உத்தரவு

மெரீனா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத விவகாரத்தில் வரும் டிச.10-ஆம் தேதி சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மை...

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:13 pm

Chennai

சென்னை: மெரீனா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத விவகாரத்தில் வரும் டிச.10-ஆம் தேதி சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா், சென்னை மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் கடை ஒதுக்கக் கோரி திருவல்லிக்கேணியைச் சோ்ந்த தேவி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மெரீனா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்த சென்னை மாநகராட்சியிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? சாலையோர வியாபாரிகளின் பிரச்னை எவ்வாறு தீா்க்கப்படுகிறது? இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா், மாநகராட்சி ஆணையா், காவல் ஆணையருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மெரீனா கடற்கரை மேம்பாட்டில் அரசு அக்கறை காட்டவில்லை. எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதை அமல்படுத்துவதில்லை. இது சரியான அணுகுமுறை இல்லை என்று கருத்து தெரிவித்தனா்.

பின்னா், இதுதொடா்பாக வரும் டிச.10-ஆம் தேதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா், சென்னை மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.