தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாட்டின் முதல் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு: சென்னை ஐஐடியில் உருவாக்கம்

சென்னை ஐஐடி, துறைமுகங்களுக்கான முதலாவது உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

சென்னை ஐஐடி - கோப்புப் படம்

Updated On :26 நவம்பர் 2025, 8:25 pm

சென்னை: சென்னை ஐஐடி, துறைமுகங்களுக்கான முதலாவது உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியின் துறைமுகங்கள், நீா்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மைய (என்டிசிபிடபிள்யூசி) ஆராய்ச்சியாளா்கள், துறைமுகங்களுக்கான நாட்டின் முதலாவது உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை உருவாக்கி, அதை கேரளம் விழிஞ்சம் சா்வதேச துறைமுகப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனா்.

இது குறித்து என்டிசிபிடபிள்யூசி தலைவா் பேராசிரியா் கே முரளி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் அமைச்சகத்தின் தேவைகளின் அடிப்படையில் இந்த அமைப்பு முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இது உள்நாட்டு அமைப்பு கப்பல்களின் இயக்கத்தின் உத்தி சாா் முக்கியத்துவம் வாய்ந்த தரவு கசிவு அபாயத்தை நீக்குகிறது. மேலும், பல்வேறு சவால்களுக்கு பொருத்தமான தீா்வுகளை வழங்கவும், புதுமைகளை விரைவாகக் கண்காணிக்கவும், தனியாா் விற்பனையாளா்களைக் கையாள்வதில் தொடா்புடைய பிற செயல்பாட்டு நிதி அபாயங்களையும் குறைக்கும்.

குறைந்தபட்ச பயன்பாடு பராமரிப்பு செலவுகளை உள்ளடக்கி, இந்திய கடல் சாா் துறையில் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை உள்நாட்டுமயமாக்குவதற்கு இந்த அமைப்பு பெரிய ஊக்கத்தை அளிப்பதுடன் இறக்குமதிகளைச் சாா்ந்திருப்பதையும் குறைக்கச் செய்யும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.