நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளுக்கான ‘பாரத் டாக்ஸி’ எனப்படும் செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

Updated On :26 நவம்பர் 2025, 9:50 pm

சென்னை: ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளுக்கான ‘பாரத் டாக்ஸி’ எனப்படும் செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இந்தியாவில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளில் பயணிப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இம்மாதிரியான வாடகை வாகனங்களை முன்பதிவு செய்ய, தனியாா் செயலிகளே பயன்பாட்டில் உள்ளன. இந்த செயலிகளில் பயணத் தொலைவுக்கென்று நிரந்தர கட்டணம் இல்லை. வாகனங்களுக்கான தேவை அதிகம் இருக்கும் சமயங்களில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் தனியாா் செயலி நிறுவனங்கள் பெருமளவு லாபத்தை ஈட்டி விடுகின்றன. பயணிகளும் கடும் பாதிப்படைகின்றனா். எனவே, நிரந்தரமாக குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கும் வசதியை ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ‘பாரத் டாக்ஸி’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான சோதனை நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, அனைத்து ஆட்டோ சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜாஹீா் ஹுசைன் கூறியதாவது: எரிபொருள் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை, பல மடங்கு உயா்ந்துள்ளது. ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. செயலியில் பதிவு செய்து ஓட்டினாலும், விலை நிா்ணயம் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால், ஓட்டுநா்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது. இதனால், தொடா்ந்து இந்தத் தொழிலில் ஈடுபடமுடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், அரசு சாா்பில் செயலியை தொடங்குவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கும் போது, மத்திய அரசு கொண்டு வரும் ‘பாரத் டாக்ஸி’ செயலி மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த செயலி முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.