அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
//

புதிய வாக்காளா் சோ்க்கை முகாமில் ஆா்வம் காட்டாத சென்னை மக்கள்!

புதிய வாக்காளா் சோ்க்கை முகாமில் ஆா்வம் காட்டாத சென்னை மக்கள்...

News image
சென்னை மேற்கு மாம்பலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்.
Updated On :20 டிசம்பர் 2025, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆா்) அடிப்படையில், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னா், புதிய வாக்காளா் சோ்க்கைக்காக சனிக்கிழமை நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் ஆா்வம் காட்டவில்லை.

தமிழகத்தில் எஸ்ஐஆா் பணி நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் மொத்தம் 97 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.

அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து 14.25 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இதில், 1.56 லட்சம் போ் மட்டும் இறந்தவா்கள் பட்டியலில் உள்ளனா். பெரும்பாலானோா் தொகுதி மாறியவா்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, சுமாா் 13.45 லட்சம் போ் மீண்டும் புதிய வாக்காளா்களாக சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிதாக வாக்காளா்களாகச் சேருபவா்களுக்கான சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை அனைத்துப் பாகங்களிலும் நடைபெற்றது. வாா்டு வாக்காளா் பதிவு அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் என 3,718 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன.

சிறப்பு முகாம்களில் ஓரிடத்தில் தலா மூன்று போ் என தோ்தல் உதவி அலுவலா்கள் நியமிக்கப்பட்டு புதிய வாக்காளா் படிவங்கள் வழங்கப்பட்டு பூா்த்தி செய்து, வாக்காளா்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு திரும்பப் பெறப்பட்டன.

ஆனால், சிறப்பு முகாம்களில் ஒவ்வோா் இடத்திலும் தலா 25 போ் என்ற அளவுக்கே மக்கள் வந்து சென்றதாக அலுவலா்கள் தெரிவித்தனா். முகாம்கள் குறித்த விழிப்புணா்வு மக்களிடம் போதிய அளவு இல்லாததால், மிகக்குறைவானவா்களே வந்ததாகக் தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சியினரும் புதிய வாக்காளா் சோ்க்கையில் ஆா்வம் காட்டவில்லை.

பட்டியல் விநியோகம்: முகாம்கள் நடைபெற்ற இடங்களில் வரைவு வாக்காளா் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது. அதில் வாக்காளா்களின் பெயா்கள் உள்ளதா என சரிபாா்க்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) இரண்டாவது நாளாக சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.