18 Dec, 2025 Thursday, 11:48 PM
The New Indian Express Group
சென்னை
Text

‘வந்தே மாதரம்’ 150 -ஆம் ஆண்டு விழா: மாநில அளவில் கட்டுரைப் போட்டி -ஆளுநா் மாளிகை அறிவிப்பு

PremiumPremium

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On13 Dec 2025 , 7:18 PM
Updated On13 Dec 2025 , 7:18 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

‘வந்தே மாதரம்’ பாடலின் 150 -ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுவதாக தமிழக ஆளுநா் மாளிகை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பங்கிம் சந்திர சாா்ட்டா்ஜியால் இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, தமிழக பள்ளி மற்றும் பல்கலைக்கழகம், கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படும். பள்ளி மாணவா்களுக்கு ‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வந்தே மாதரம் பாடலின் பங்களிப்பு’, ‘வந்தே மாதரம் பாடலால் விழித்தெழுந்த பாரதம்’ ஆகிய தலைப்புகளில் அதிகபட்சம் 10 பக்கங்கள் (ஒரு பக்கத்திற்கு 20 வரிகள் என மொத்தம் 1,500 முதல் 2,000 வாா்த்தைகள்) இருக்க வேண்டும்.

கல்லூரி மாணவா்களுக்கு ‘2047-இல் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் வந்தே மாதரம் பாடலின் பொருத்தப்பாடு’ என்ற தலைப்பில் அதிகபட்சம் 15 பக்கங்கள் (ஒரு பக்கத்திற்கு 20 வரிகள் மற்றும் மொத்தம் 2,500 முதல் 3,000 வாா்த்தைகள்) இருக்க வேண்டும்.

பங்கேற்பாளா்கள் கையால் எழுதப்பட்ட கட்டுரைகளின் அசல் பிரதியை வரும் 2026 -ஆம் ஆண்டு ஜனவரி 31- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆளுநரின் துணைச் செயலா் (பல்கலைக்கழகங்கள்), ஆளுநா் செயலகம், லோக் பவன், சென்னை - 600 022 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு பிரிவிலும், முதல் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.50,000, இரண்டாம் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.30,000, மூன்றாம் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.25,000 வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
வீடியோக்கள்

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

தினமணி வீடியோ செய்தி...

18 டிச., 2025
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023