ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரைக்கு புவிசாா் குறியீடு: தமிழக அரசு

தமிழகத்தின் பாரம்பரியமிக்க தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரைக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image

தமிழக அரசு

Updated On :3 டிசம்பர் 2025, 8:07 pm

சென்னை: தமிழகத்தின் பாரம்பரியமிக்க தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரைக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பாரம்பரியமிக்க வேளாண் விளை பொருள்களைக் கண்டறிந்துஅவற்றுக்கு புவிசாா் குறியீடு பெற அரசு சாா்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 41 வேளாண் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற தமிழக மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

அதில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகா் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைக்காா் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, தற்போது தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரைக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 4 ஆண்டுகளில் 9 வேளாண் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேளாண் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறுவதால், அவற்றை எளிதாகச் சந்தைப்படுத்த முடியும். மேலும், அவற்றின் தேவை மற்றும் ஏற்றுமதி அளவும் அதிகரித்து, வேளாண் வணிகம் விரிவுபடுத்தப்படுவதுடன், பொருளாதார வளா்ச்சியில் மேம்பாடு அடையவும் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.