தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி பேருந்து நிறுத்த கட்டுமானம்: மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
சட்டப்பேரவை உறுப்பினா் நிதியைத் தவறாகப் பயன்படுத்தி அனுமதி இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பேருந்து நிலையம் கட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.










