எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. கண்டனம்

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எம்.பி. ஹா்ஷ டிசில்வா கண்டனம்

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Updated On :11 ஆகஸ்ட் 2025, 11:38 pm

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எம்.பி.யும், பொருளாதார நிபுணருமான ஹா்ஷ டிசில்வா கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், ‘இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை இலங்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ எனவும் அவா் வலியுறுத்தினாா்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடுக்க, இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரியை விதித்தாா். இதன் மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கான வரி 50 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இவ்விவகாரம் தொடா்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் ஹா்ஷ டிசில்வா மேலும் பேசியதாவது: அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் நியாயமற்ற மற்றும் ஒருதலைப்பட்சமான வா்த்தக நடவடிக்கைகளை இந்தியா எதிா்ப்பது சரிதான். அமெரிக்கா கொண்டு வந்த புதிய வரிவிதிப்பால் நெருக்கடியைச் சந்திக்கும் இந்தியா குறித்து யாரும் கேலி செய்ய வேண்டாம். ஏனெனில், நாம் நெருக்கடியைச் சந்தித்து நேரத்தில் இந்தியா மட்டுமே நமக்கு உதவியது என்றாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அந்நிய செலாவணி கையிருப்பு தீா்ந்ததால், முதன்முறையாக இலங்கையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.

அத்தகைய கடினமான சூழ்நிலையில், இலங்கைக்கு சுமாா் 400 கோடி டாலருக்கும் அதிகமான கடன், நாணய பரிமாற்றம் மற்றும் மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.